ஒரு குட்டி கதையிலிருந்து ஆரம்பிப்போமா? Available on Audio Format ஒரு பெரிய ஊரு. ஒரு நாலு ரோடு ஜாயிண்ட் ஆவுற மாதிரி ஒரு ஜங்ஷன். ஒரு பிஸியான ஏரியா. ஆள் நடமாட்டம் அதிகமா இருக்கக்கூடிய ஒரு ஏரியா. அங்க சென்டர்ல ஒரு முரட்டு ஜல்லிக்கட்டு காளை ஒன்னு நின்னுட்டு இருக்கு. கால்ல மண்ணை வீசிக்கிட்டு சீறிகிட்டு அப்படியே நின்னுட்டு இருக்குது. யாருமே பக்கத்துல போக முடியல. அந்த இடம் ஒரு கேசுவலா மாறணும் அப்படின்னா அந்தக் […]
2014 க்கு முன் காங்கிரஸ் கட்சியில் உள்ள சிலர் மீதும், அவர்கள் ஆட்சியில் இருக்கும்பொது கூட்டணியில் அங்கம் வகித்த கட்சிகளின் மீதும் ஊழல் குற்றச்சாட்டுகள் பெருமளவில் இருந்தன. இருப்பினும் காங்கிரஸ் கட்சி இந்தியாவில் உள்ள எல்லா சமூக மக்களையும் அரவனைத்துச் செல்லும் கட்சி என்று இன்றளவும் நம்பப்படுகிறது. காங்கிரஸ் கட்சி நாட்டில் உள்ள சிறுபான்மை மக்களிடம் பெரும் நம்பிக்கை பெற்ற கட்சியாகத்தான் இருக்கிறது. அந்த பொதுவான கருத்தாக்கத்தின் ஊடேதான் தலைவர் தளபதி விஜய் அவர்களும் காங்கிரஸ் கட்சியை […]
1984-ல் தமிழக தேர்தல் களம் தகதகவென்று தகித்துக் கொண்டிருக்க, எம்ஜிஆர் அமெரிக்காவில் உள்ளபுரூக்களின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்தார். எம்ஜிஆர் 1967 முதல் எல்லா தேர்தல்களிலும் பம்பரமாய் சுழன்ற நட்சத்திர வேட்பாளர். இப்போது அவர் தேர்தலில் பிரச்சாரம் செய்ய முடியாத அளவுக்கு நோய்வாய்ப்பட்டிருந்தார். இந்த சூழ்நிலையில் அஇஅதிமுக வரும் தேர்தலை எப்படி எதிர்கொள்ளப் போகிறது என்ற கேள்வி தொண்டர்களை கேள்வியாய் குடைந்து கொண்டிருந்தது. அப்போது அமெரிக்காவிலிருந்து ஒரு நல்ல செய்தி வெளிவந்தது. அச்செய்தி எம்ஜிஆர் “ஆண்டிப்பட்டியில்” போட்டியிடப் போவதாக […]
புதிய ஆட்சி 1980 ல் 14 கட்சிகளுடன் மிகப்பெரிய கூட்டணியை கட்டமைத்து ஆட்சியைப் பிடித்த எம்ஜிஆர் வெற்றி வெற்றிப்பூரிப்புடன் அரசை நிர்வகிக்க துவங்கினார். அந்த மகிழ்ச்சி நெடுநாள் நீடிக்க முடியாமல் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கேடாக மாறியிருந்தது. சட்டம் – ஒழுங்கு நக்சல்பாரிகளின் வன்முறைகளால் தமிழ் நாட்டின் வட ஆற்காடு, தர்மபுரி, திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, காட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் வன்முறைகள் தொடர்கதையானது. திருப்பத்தூரில் நடைபெற்ற வெடிகுண்டு சம்பவத்தில் போலீஸ் ஜீப்பில் பயணித்த காவல்துறையினர் அத்தனை பேரும் கொல்லப்பட்டனர். இந்த […]
காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி இன்று திரு விஜய் அவர்களை அவருடைய பட்டினப் பாக்கம் இல்லத்தில் சந்தித்தார். இரண்டு மணி நேரமாக ஆலோசனையில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியாகின்றது. இதற்கு முன் ஐந்து பேர் கொண்ட குழு தேர்தல் தொகுதி உடன்பாட்டுக்காக காங்கிரஸ் கட்சியின் மேலிடம் அமைத்ததாக கூறப்பட்டு வந்த நிலையில் இன்று 05/12/2025 விஜய் அவர்களை ராகுல் காந்தியின் வியூக வகுப்பாளர்களில் ஒருவரான பிரவீன் சக்கரவர்த்தி சந்தித்து இருப்பது அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த […]
1962 ஆகஸ்ட் 11ஆம் தேதி நடைபெற்ற திருச்செங்கோடு இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் செங்கோட கவுண்டரும் திமுக சார்பில் சே கந்தப்பனும் போட்டியிட்டனர். காங்கிரஸ் வேட்பாளருக்கு பிரஜா சோசியலிஸ்ட், கம்யூனிஸ்ட் கட்சி, மா. பொ. சி. தமிழரசுக் கழகம், ஜன சங்கம், தமிழ் தேசிய கட்சி, சோசியலிஸ்ட் கட்சி ஆகியவை ஆதரவாக இருந்தனர். திமுகவிற்கு ராஜாஜியின் சுதந்திரா கட்சி மட்டும் ஆதரித்தது. பணபலம் படைபலம் அமைச்சர்களின் தீவிரப் பிரச்சாரம் எல்லாம் காங்கிரசுக்கு இருந்தது திமுக வேட்பாளருக்கு திமுகவின் இரண்டாம் கட்ட […]
50 ஆண்டுகளுக்கு மேலாக அதிமுகவில் பயணித்த திரு செங்கோட்டையன் இன்று புதிதாக தொடங்கப்பட்ட விஜயின் தவெகவில் இணைந்திருப்பது எல்லோருக்கும் மிகப்பெரிய ஆச்சர்யத்தை கொடுத்திருக்கிறது. காரணம் 55 வருடங்களாக எம்ஜிஆர் ஜெயலலிதாவை மட்டுமே தலைவராக ஏற்றுக் கொண்டவர். அதுவும் ஒரே கட்சியில் தொடர்ந்து நேற்று வரை பயணித்தவர். இன்று புதிதாக தொடங்கப்பட்ட விஜய் என்ற நடிகரின் கட்சியில் இணைந்திருப்பது தான் எல்லோருக்கும் ஒரு ஆச்சரியக்குறியாக மாறியிருக்கிறது. விஜய் காஞ்சிபுரம் மேடையில் சொன்னது போல் தவெக ஒரு ஆச்சரியக்குறியாக இருக்கும் […]